tamilnif 4 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரிடி

Share

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரிடி

இலங்கையில் இதுவரையில் வற் வரிக்கு உட்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளை அதன் கீழ் கொண்டுவரும் புதிய வரி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் செய்யப்படவுள்ளது.

இன்று நிறைவேற்றப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டத்திற்கமைய, பெட்ரோல், தொலைபேசி, கணினி, இறக்குமதி செய்யப்படும் பானங்கள், பாண்தூள்கள், குழந்தை பால் உணவுகள் போன்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

புதிய வற் வரிக்கு உட்படுத்தப்படும் பகுதிகளில் இறுதிச் சடங்குகளும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தகனம் மற்றும் புதைகுழிகள் மீதும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, வாகனங்கள், கையடக்கத் தொலைபேசிகள், மருந்துப் பொருட்கள், மருந்துகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், அனைத்து சுகாதார சேவைகள், இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், மீன்பிடி தொடர்பான அனைத்து உபகரணங்கள், இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் பால், ஆடை தொழில், மின் கட்டணம், கல்விச் சேவைகள், பேருந்து, ரயில் கட்டணம் உள்ளிட்ட பொருள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களும் உயரும்.

புதிய சட்டத்தின் முதன்மை நோக்கம், அனைத்து நிதிச் சேவைகள், அனைத்து மொத்த மற்றும் சில்லறை வணிகங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் என்பன வற் வரிக்கு உட்பட்டது அல்ல.

விலை மனுக்கோல் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்கள் உட்பட, 18 சதவீத வற் வரியை விதிக்க வேண்டும்.

இந்த சட்டமூலத்தை இன்று விவாதித்து திருத்தம் செய்த பின்னர், எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த வற் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 10,624 ஆகும். அரசாங்கத்தின் வருடாந்த வரி வருவாயில் 21.4% வற் வரி செலுத்துவதன் மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...