2 20
இலங்கைசெய்திகள்

2025 இல் கிடைக்கப்போகும் பாரிய சலுகைகள்: ஜனாதிபதியின் அறிவிப்பு

Share

2025 இல் கிடைக்கப்போகும் பாரிய சலுகைகள்: ஜனாதிபதியின் அறிவிப்பு

அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் சில உணவு மற்றும் பானங்களின் வற் மற்றும் வருமான வரி நியாயமான தொகையால் குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் (Gampaha) தேசிய மக்கள் சக்தி நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருட பொதுத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியினால் நடாத்தப்பட்ட தொடர் மக்கள் பேரணியின் இறுதிப் பொதுக்கூட்டம் கம்பஹாவில் நடைபெற்றது.

அதன் போது, டிசம்பரில் 04 மாத காலத்திற்கான குறைமதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு பெப்ரவரி மாத இறுதிக்குள் புதிய வரவு செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் புதிய திசையில் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சில உணவு மற்றும் பானங்கள் மீதான வற் வரியை முற்றாக நீக்குவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...