1 13
இலங்கைசெய்திகள்

தலைமைப் பதவியை துறக்கும் வாசுதேவ

Share

தலைமைப் பதவியை துறக்கும் வாசுதேவ

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தற்காலிகமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு தற்காலிகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்ன நியமிக்கப்பட உள்ளார்.

நிரோசன் பிரேமரட்னவை அதிகாரபூர்வமாக தலைமைப் பதவியில் அமர்த்தும் நிகழ்வு இன்றைய தினம் பத்தரமுல்ல பகுதியில் நடைபெறவுள்ளது.

கட்சியின் பணிகளை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டியதன் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்னவை தலைமைப் பதவியில் அமர்த்துவதாக முன்னணியின் பிரதி செயலாளர் ஜே.டி.வீ திலகசிறி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...