2 8
இலங்கைசெய்திகள்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் தெரிவு

Share

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில் இடம்பெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 8 பேரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் 5 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 4 பேரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 பேரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் 2 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் 1 வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் 2 பேரும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தவிசாளர் தெரிவுக்கு கந்தையா யசீதனின் பெயரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதனுடயை பெயர்களும் முன்மொழியபட்டது.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் நடாத்துவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடாத்துவதா என கோரப்பட்டது.

இதன் பொழுது பகிரங்க வாக்கடுப்பிற்கு ஆதரவாக 19 வாக்குகளும் இரகசிய வாக்கெடுப்பிற்கு 9 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் பகிரங்க வாக்கெடுப்பில் கந்தையா யசீதன் தமிழ் மக்கள் கூட்டணி, ஈபிடிபி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசு கட்சியின் 13வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் அளிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி 6 வாக்குகளை கொண்டிருந்த பொழுதிலும் நடுநிலை வகித்தது.

இதேவேளை உப தவிசாளராக பேரின்ப நாயகம் சுபாகரின் பெயர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பிலும் மற்றும் தர்மகுலசிங்கம் உதயகுமாரின் பெயர் சங்கு சைக்கிள் கூட்டணியின் சார்பில் முன்மொழியப்பட்டது.

இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பேரின்ப நாயகம் சுபாகர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...