2036 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியை ரணிலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்

tamilniD 6

2036 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியை ரணிலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்

எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு வரையில் நாட்டின் ஆட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் 12 ஆண்டுகளுக்கு நாட்டின் மக்கள் ஆணையை ஜனாதிபதி ரணிலிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரியுள்ளார்.

இன்னும் 12 ஆண்டுகள் ஜனாதிபதி ரணிலிடம் நாட்டை ஒப்படைத்தால் நாடு பலமான நாடாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யத்தவறினால் நாடு மீண்டும் அழிவுப்பாதையில் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version