25 6847021133f05
இலங்கைசெய்திகள்

பாரிய விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவிப்பு

Share

பாணந்துறை – மொரட்டுவ பகுதியில் ஏற்பட்ட இருந்த பாரிய தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன் சமந்த பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தொடருந்தை மோதாமல் நிறுத்திய ஓட்டுநர் விதுர விதர்ஷனும் இன்று(9) கௌரவிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் தொடருந்து பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பாணந்துறை – மொரட்டுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற தொடருந்து குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்பே தொடருந்தை நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் தடுத்திருந்தார்.

தண்டவாளம் உடைந்திருந்த நிலையில், அதனை கண்ட சமந்த பெர்னாண்டோ, தனது சிவப்பு நிற சண்டையை கழற்றி தொடருந்து ஓட்டுநருக்கு ஆபத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பாதுகாப்பாக தொடருந்து நிறுத்தப்பட்டமையினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 684c110644e76
இலங்கைசெய்திகள்

கிழித்தெறியப்பட்ட பௌத்த தோரண பதாதைகள்! விளக்கமளித்த பெண்

தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது....

images 3 1
இலங்கைசெய்திகள்

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி பகிர்ந்த தகவல்

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிகழ்வு...

25 684befed3eedb
இலங்கைசெய்திகள்

ஒபரேஷன் ரைசிங் லயன்! ஈரானை உலுக்கிய தாக்குதலால் அணு ஆயுத விளிம்பில் மத்திய கிழக்கு

அலை அலையாக வான்வழித் தாக்குதல்கள், உயர் இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இராணுவ...

images 8
இலங்கைசெய்திகள்

யாழ்.மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து

இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்து தெரிவு நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என தமிழரசுக்...