24 65fbc9b04ce58
இலங்கைசெய்திகள்

280 ரூபாவாகும் டொலரின் பெறுமதி..!

Share

280 ரூபாவாகும் டொலரின் பெறுமதி..!

ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வந்த போது அதிலிருந்து மீள்வதற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது.

ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

தற்போது ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் பொருட்களின் விலை குறைவடையும். அடுத்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 18ஆம் திகதியை விட கடந்த 19ஆம் திகதி (19.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 29 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 90 சதம் ஆகவும் பதிவாகியிருந்தது.

இதேவேளை பொருட்களின் விலை அதிகரிப்பு வீதத்தை நாம் கட்டுப்படுத்துகிறோம் என்பதால் தற்போதைய நிலைமை சரியாகிவிட்டது என்று அர்த்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், பணவீக்கம் என்பது பொருட்களின் விலைக் குறைவல்ல. அப்படியானால் பணவாட்டம் ஏற்பட வேண்டும். பொருட்களின் விலை அதிகரிப்பு வீதத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.

அதனால் நிலைமை சரியாகிவிட்டது என அர்த்தப்படாது. சீரான நிலைக்கு வருவதற்கு உரிய காலம் எடுக்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் நாட்டை இருந்த இடத்தில் இருந்து மேலே கொண்டு செல்லும் வகையில் தயாராகி வருகின்றன.

ஜனாதிபதியின் கூற்றுப்படி, வருட இறுதியில் ஒரு புதிய மாற்றத்தை நாம் எவ்வாறு பார்க்க முடியும்? ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது இந்த நாட்டைப் பற்றித் தெளிவாகச் சிந்திப்பவர்கள் ஒன்று கூடும் மேடை அமைக்கப்படும்.

ஜனாதிபதித் தேர்வு ஜனாதிபதித் தேர்தலுக்கு பல்வேறு நபர்கள் கோரிக்கை விடுத்தாலும் இவர்களுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் தொடர்பில் மக்களிடம் ஒரு உணர்வு உள்ளது.

அனுபவம், கல்வி, சர்வதேச பிரச்சினைகளை சமாளிக்கும் திறன், முடிவெடுக்கும் திறன், நாடு சிக்கலில் சிக்கியபோது கையாண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நல்லதொரு தீர்மானத்தை எடுக்கும் திறன் மக்களுக்கு உள்ளது. மக்கள் சிறந்த நபரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அனுபவம், கல்வி, சர்வதேச பிரச்சினைகளைச் சமாளிக்கும் ஆற்றல், முடிவெடுக்கும் திறன், நாடு சிக்கலில் சிக்கியபோது கையாண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தலில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...