3
இலங்கை

ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சி – இலங்கை குறித்து வெளியான அறிக்கை

Share

ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சி – இலங்கை குறித்து வெளியான அறிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பதவிக்கு வந்தால் நாட்டில் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி அடையும் என்றும் டொலரின் பெறுமதி மற்றும் பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்படலாம் என கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்திருந்தது.

எனினும் நேற்றைய தினம் டொலருக்கெதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய மாற்றம் இன்றி காணப்படுவதுடன் பங்குச்சந்தையும் சீரான நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (25.09.2024) நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 307.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் உருவாகியுள்ள புதிய சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான மூடிஸ் தெரிவித்துள்ளது.

ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பெரிய பொருளாதாரக் கொள்கைகள் பெரிதாக மாறாது என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சில கொள்கை முன்னுரிமைகளை மீட்டமைக்கும் போது நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பது சவாலானதாக இருக்கலாம் என்று நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. இது மேலும் அதிக கடன் அபாய வகைப்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார மாற்ற சட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்த இலக்குகளை புதிய சட்டம் அல்லது திருத்தம் மூலம் மாற்ற முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆட்சேபனை இல்லை எனவும் மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...

21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...