23 11
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கடல்சார் கள பாதுகாப்பு: அநுர அரசுடன் கலந்துரையாடிய அமெரிக்கா தரப்பு

Share

இலங்கையின் கடல்சார் கள பாதுகாப்பு: அநுர அரசுடன் கலந்துரையாடிய அமெரிக்கா தரப்பு

இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை ஆதரிக்கும் வகையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் நல்லாட்சிக்கான தமது அர்ப்பணிப்பை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வெளியிட்ட கருத்தில் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ர்.

இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலாளரான எயார் வைஸ் மார்சல் சம்பத் துயகோந்தவுடன் இது தொடர்பில் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை மேற்கொண்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

பிராந்திய பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் நல்ல நிர்வாகத்திற்கான வலுவான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு பற்றி தாம் இருவரும் விவாதித்ததாக தூதுவர் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க – இலங்கை கூட்டுறவை வலுப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை ஆதரிக்கும் வகையில் அண்மையில் பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ஈஆர் விமானத்தை மாற்றியதன் மூலம் இந்த கூட்டாண்மை செயல்பட்டதைக் கண்டு பெருமிதம் கொள்வதாக தூதுவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...