tamilni 291 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை குழந்தைகளுக்கு அமெரிக்கா உதவிக்கரம்

Share

இலங்கை குழந்தைகளுக்கு அமெரிக்கா உதவிக்கரம்

உலக உணவுத் திட்ட(WFP) அமைப்பின் மூலம் இலங்கையிலுள்ள தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் திரிபோஷ வழங்க அமெரிக்கா ஆதரவளித்துள்ளது.

திரிபோஷ உணவுத் திட்டத்தைத் தொடர்வதற்கு ஆதரவாக, 4,700 மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் மற்றும் சோளங்களை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிலையமானது ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின்(WFP)அமைப்பானது இலங்கையிலுள்ள திரிபோஷ தொழிற்சாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் குறித்த மூலப்பொருட்கள் கையளித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் (WFP) அமைப்பின் அவசர நடவடிக்கைக்கு அமெரிக்காவிடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களின் பரந்த பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த மூலப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் உலகளவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக, உணவு பாதுகாப்பற்ற இலங்கை குடும்பங்களுக்கு பணம், உணவு உதவி மற்றும் பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கு (WFP)அமைப்பிற்கு அமெரிக்கா உதவியுள்ளது.

அதேவேளை பாடசாலை உணவு மற்றும் திரிபோஷா – வலுவூட்டப்பட்ட கலப்பு உணவு தயாரிப்பு உட்பட தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை அமெரிக்கா ஆதரிப்பதாக தெரிவி்த்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 19
செய்திகள்இந்தியா

மதுரை மத்திய தொகுதி: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சுந்தர் சி களம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள புதிய...

Untitled 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி அரிசி இறக்குமதியில் நிதானம்: இறக்குமதியாளர்கள் சங்கம் விளக்கம்!

இலங்கையில் தற்போது புதிய நெல் அறுவடை சந்தைக்கு வந்துள்ள நிலையில், உடனடியாக அரிசி இறக்குமதிக்கு அனுமதி...

Untitled 17
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் புதிய போர்முனை: இஸ்ரேல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion)...

Untitled 16
செய்திகள்விளையாட்டு

தமிழக சட்டமன்ற தேர்தல் – 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் த.வெ.க!

இந்தியாவின் தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம்...