tamilni 291 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை குழந்தைகளுக்கு அமெரிக்கா உதவிக்கரம்

Share

இலங்கை குழந்தைகளுக்கு அமெரிக்கா உதவிக்கரம்

உலக உணவுத் திட்ட(WFP) அமைப்பின் மூலம் இலங்கையிலுள்ள தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் திரிபோஷ வழங்க அமெரிக்கா ஆதரவளித்துள்ளது.

திரிபோஷ உணவுத் திட்டத்தைத் தொடர்வதற்கு ஆதரவாக, 4,700 மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் மற்றும் சோளங்களை சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிலையமானது ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின்(WFP)அமைப்பானது இலங்கையிலுள்ள திரிபோஷ தொழிற்சாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் குறித்த மூலப்பொருட்கள் கையளித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் (WFP) அமைப்பின் அவசர நடவடிக்கைக்கு அமெரிக்காவிடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்களின் பரந்த பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த மூலப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் உலகளவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக, உணவு பாதுகாப்பற்ற இலங்கை குடும்பங்களுக்கு பணம், உணவு உதவி மற்றும் பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கு (WFP)அமைப்பிற்கு அமெரிக்கா உதவியுள்ளது.

அதேவேளை பாடசாலை உணவு மற்றும் திரிபோஷா – வலுவூட்டப்பட்ட கலப்பு உணவு தயாரிப்பு உட்பட தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை அமெரிக்கா ஆதரிப்பதாக தெரிவி்த்துள்ளது.

Share
தொடர்புடையது
25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது....

images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன்...