22 16
இலங்கைசெய்திகள்

புதிய ஜனாதிபதி அனுரவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள செய்தி

Share

புதிய ஜனாதிபதி அனுரவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள செய்தி

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் அமெரிக்கா இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, இலங்கை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அமெரிக்கா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், விடுத்துள்ள ஒரு அறிக்கையில், இந்தத் தேர்தலை, இலங்கையின் ஜனநாயக அமைப்புகளின் வலிமைக்கான சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய இலங்கை மக்களை தாம் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஒரு நிலையான, செழிப்பான மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான அர்ப்பணிப்பை, அமெரிக்கா விரிவுபடுத்துவதாகவும், அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் இரண்டு நாடுகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...