24 66497d04e0623
இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்காக இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்த அமெரிக்க செனட்டர்

Share

தமிழர்களுக்காக இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்த அமெரிக்க செனட்டர்

கைது அச்சமின்றி, தமிழர்கள் இனப்படுகொலையின் 15 ஆண்டுகளை நினைவுகூர அனுமதிக்க வேண்டும் என்று மேரிலாந்திற்கான அமெரிக்க செனட்டர் பென் கார்டின் (Ben Cardin) இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும் பதவி வகிக்கும் செனட்டர் பென் கார்டின், தமது ‘X’ தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப் போரின் போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். வலுக்கட்டாயமாக காணாமல் போகச்செய்யப்பட்டனர் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மரணித்தவர்களின் நினைவேந்தலுக்கான முள்ளிவாய்க்கால் தினத்தை ஒட்டிய கைதுகளால் தொந்தரவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனை மையப்படுத்தியே அமெரிக்க செனட்டரின் கோரிக்கை வெளியாகியுள்ளது.

முன்னதாக வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது கைது செய்யப் போவதாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸ் அதிகாரிகள் விழிப்புணர்வுக்காக அமைக்கப்பட்டிருந்த பூக்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஆக்ரோஷமாக தள்ளி, மாணவர்கள் பரிமாறவிருந்த கஞ்சி பானையையும் எடுத்துச் சென்றனர்.

அதேநேரம், திருகோணமலை சம்பூரில், இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் கஞ்சி பரிமாறிய நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...