tamilni 540 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை வழங்கவுள்ள அமெரிக்கா

Share

இலங்கைக்கு நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை வழங்கவுள்ள அமெரிக்கா

இலங்கைக்கு “நான்காவது நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை அமெரிக்கா வழங்கவுள்ளதாக முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா தெரிவித்துள்ளார்.

விஜயபாகு என்ற பெயரைக்கொண்ட மூன்றாவது கண்காணிப்பு கப்பலை இலங்கையின் உரிமைக்கு மாற்றும் நிகழ்வின்போது கொழும்பு துறைமுகத்தில் வைத்து அவர் இதனை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் நான்காவது கப்பலுக்கான முயற்சிக்கு 9 மில்லியன் நிதியுதவியை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கியுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படையின் துணை செயலாளர் வர்மா கூறியுள்ளார்.

மேலும், இந்த கப்பல் இலங்கைக்கு வழங்கப்பட்டவுடன், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

அத்துடன் இந்தக் கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் கண்காணிப்பில் ஈடுபட வழியேற்படும் அதேநேரம், இந்தியப் பெருங்கடலின் பரபரப்பான கடல் பாதைகளை கடக்கும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...