இலங்கையின் கேந்திரத்தை உற்றுநோக்கும் சர்வதேச கடற்படை

tamilni 199

இலங்கையின் கேந்திரத்தை உற்றுநோக்கும் சர்வதேச கடற்படை

இலங்கையின் கடற்படையானது 39 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச கடல் பிராந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் அமெரிக்காவே செயற்படுவதாகவும் பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்தார்.

இலங்கையின் கடல்சார் எல்லைகளில் சர்வதேசத்தின் பார்வையும், இந்திய, சீன உறவின் முக்கியத்துவம் தொடர்பிலும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், தென்னாசிய பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திரமானது அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு முக்கிய பிரச்சினையாக இருந்ததாகவும், இதனை தடுக்கவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு இந்திய, மற்றும் சீனாவின் ஆதரவு வலுக்கும் நிலையில் இருந்தாலும் அமெரிக்காவானது அதன் பார்வையை இலங்கை மீது செழுத்திகொண்டு இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

Exit mobile version