tamilni 488 scaled
இலங்கைசெய்திகள்

ஏமனின் ஹவுதிகளை அடக்க முடியாமல் திணறும் வல்லரசு நாடு

Share

ஏமனில் ஹவுதிகள் மீது தொடர்ந்து ஐந்து வாரங்களாக தாக்குதல் முன்னெடுத்தும், அமெரிக்காவால் ஹவுதிகளை அடக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா வழியாக செல்லும் வணிக மற்றும் சர்வதேச கப்பல்களை ஹவுதிகள் தொடர்ந்து குறிவைத்து வருகின்றனர்.

இந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் MQ-9 Reaper ட்ரோன் ஒன்றையும், அமெரிக்காவுக்கு சொந்தமாக இரு வணிக கப்பல்களையும், அமெரிக்க போர் கப்பல் ஒன்றின் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜனவரி 11ம் திகதியில் இருந்து ஹவுதிகள் மீது 32 தற்காப்பு தாக்குதல்களை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. ஆனால் அந்த தாக்குதல்களால் ஹவுதிகளை அமெரிக்காவால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இதனிடையே, ஹவுதிகளை தீவிரவாத அமைப்பு என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் பொருளாதார உதவிகள் இன்றி, ஹவுதிகள் தாக்குதல்களை குறைத்துக் கொள்வார்கள் என அமெரிக்கா நம்புகிறது.

ஆனால், காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை தங்கள் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என அவுதிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஹவுதிகள் தாக்குதல்களை நிறுத்தும் வரை அமெரிக்க இராணுவம் அவர்களின் இலக்குகளைத் தாக்கும் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது..

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...