4 25
இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Share

அண்மைக்காலமாக தூதரக அதிகாரிகளை போன்று போலி சமூக ஊடக கணக்குகள் அதிகளவில் உருவாகி வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

சமூக ஊடக பயனாளர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென தூதரகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் அல்லது அதன் பணியாளர்கள் பெயரில் செயல்படும் எந்தவொரு கணக்கையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா தொடர்பான தகவல்களைத் தேடி வரும் பலரை இலக்காகக் கொண்ட போலி கணக்குகள் வழியாக தவறான தகவல்களும், மோசடி நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாகவே இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“நாங்கள் வழங்கும் உண்மை மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற, போலிகளைத் தவிர்த்து நேரடியாக அதிகாரப்பூர்வ மூலத்தையே அணுகுங்கள்” என தூதரகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் சமூக ஊடக கணக்குகளையும் பயன்படுத்தலாம்:

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் வெறும் X தளத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கை பராமரிக்கிறார்.

முகநூல் Facebook, இன்ஸடாகிராம் Instagram, டெலிகிராம் Telegram போன்ற தளங்களில் அவரது பெயரில் இயங்கும் எந்தவொரு கணக்கும் தவறானவையாகும் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் எனவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...