4 25
இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Share

அண்மைக்காலமாக தூதரக அதிகாரிகளை போன்று போலி சமூக ஊடக கணக்குகள் அதிகளவில் உருவாகி வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

சமூக ஊடக பயனாளர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென தூதரகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் அல்லது அதன் பணியாளர்கள் பெயரில் செயல்படும் எந்தவொரு கணக்கையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா தொடர்பான தகவல்களைத் தேடி வரும் பலரை இலக்காகக் கொண்ட போலி கணக்குகள் வழியாக தவறான தகவல்களும், மோசடி நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாகவே இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“நாங்கள் வழங்கும் உண்மை மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற, போலிகளைத் தவிர்த்து நேரடியாக அதிகாரப்பூர்வ மூலத்தையே அணுகுங்கள்” என தூதரகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் சமூக ஊடக கணக்குகளையும் பயன்படுத்தலாம்:

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் வெறும் X தளத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கை பராமரிக்கிறார்.

முகநூல் Facebook, இன்ஸடாகிராம் Instagram, டெலிகிராம் Telegram போன்ற தளங்களில் அவரது பெயரில் இயங்கும் எந்தவொரு கணக்கும் தவறானவையாகும் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் எனவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...