3 11
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவின் அதிரடி தீர்மானத்தால் போர்க்குற்றச்சாட்டிலிருந்து தப்பும் இலங்கை

Share

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவானது, இலங்கைக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்தும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 வது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்திற்கு சவால் விடுக்கப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கை மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு, கலப்பின நீதிமன்றம் அமைப்பது போன்ற திட்டங்களை அமெரிக்கா முன்வைத்தது. அதனை மேற்குலக நாடுகள் ஆதரிக்கின்றன.

இந்நிலையில் இந்தத் தீர்மானத்திலிருந்து அமெரிக்கா விலகுவதால் இலங்கைக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாம் உருவாக்கும் மனித உரிமைகள் திட்டத்தை நாமே முன்வைக்க முடியும். இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற்றால், இலங்கைக்கு எதிரான முந்தைய திட்டத்தை முறியடிக்க முடியும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...