இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதுவருக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையே விசேட சந்திப்பு

Share
24 66ae26dfe642b
Share

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று(02.08.2024) சரத் பொன்சேகாவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் ஊழலை எவ்வாறு ஒழிப்பது என்பது பற்றிய நுண்ணறிவு மற்றும் யோசனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இந்த நோக்கத்தை அடைவதற்கு அமெரிக்காவுடனும் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்ற தான் எதிர்ப்பார்ப்பதாக பொன்சேகா தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இருப்பதாக பொன்சேகா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...