1 27
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! நாடு முழுவதும் வேகமாக பரவும் நோய்த்தொற்று

Share

நாட்டில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, சிக்குன்குனியா வைரஸ் நோய் இலங்கை முழுவதும் பரவி வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் அறிவியல் துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

இந்த சிக்குன்குனியா நோய்த்தொற்று இலங்கை முழுவதும் பரவலாகப் பரவி வருவதாகவும், தற்போதைய வைரஸ் இந்தியப் பெருங்கடல் பரம்பரையின் பல தனித்துவமான பிறழ்வுகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வேகமாக பரவி வரும் இந்த நோய்த்தொற்று தொடர்பில் நாட்டின் சுகாதாரத் துறை மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனப்புர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆராய்ச்சிப் பிரிவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இந்த வைரஸ் இந்தியப் பெருங்கடல் பரம்பரையின் பல தனித்துவமான பிறழ்வுகளுடன் நிகழ்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு இறுதியிலிருந்து இலங்கையில் சிக்குன்குனியாவின் தொற்றுநோய் பரவி வருவதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது பரவி வரும் சிக்குன்குனியா திரிபு தனித்துவமான பிறழ்வுகளைக் காட்டுகிறது என்றும், கட்டமைப்பு அல்லாத மேலும் பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...