1 27
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! நாடு முழுவதும் வேகமாக பரவும் நோய்த்தொற்று

Share

நாட்டில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, சிக்குன்குனியா வைரஸ் நோய் இலங்கை முழுவதும் பரவி வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் அறிவியல் துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

இந்த சிக்குன்குனியா நோய்த்தொற்று இலங்கை முழுவதும் பரவலாகப் பரவி வருவதாகவும், தற்போதைய வைரஸ் இந்தியப் பெருங்கடல் பரம்பரையின் பல தனித்துவமான பிறழ்வுகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வேகமாக பரவி வரும் இந்த நோய்த்தொற்று தொடர்பில் நாட்டின் சுகாதாரத் துறை மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனப்புர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆராய்ச்சிப் பிரிவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இந்த வைரஸ் இந்தியப் பெருங்கடல் பரம்பரையின் பல தனித்துவமான பிறழ்வுகளுடன் நிகழ்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு இறுதியிலிருந்து இலங்கையில் சிக்குன்குனியாவின் தொற்றுநோய் பரவி வருவதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது பரவி வரும் சிக்குன்குனியா திரிபு தனித்துவமான பிறழ்வுகளைக் காட்டுகிறது என்றும், கட்டமைப்பு அல்லாத மேலும் பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...