இலங்கைசெய்திகள்

இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ முறை

Share
இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ முறை
இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ முறை
Share

இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ முறை

சிங்கப்பூர், பிரான்ஸ் வரிசையில் தற்போது இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் யு.பி.ஐ பரிவர்த்தனை முறை ஒவ்வொரு ஆண்டும் பிரபலமடைந்து வருகிறது. யு.பி.ஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், மதிப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.

சிறு வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை எல்லா இடங்களிலும் யு.பி.ஐ பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு இடையே யு.பி.ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்த ரிசர்வ் வங்கியும், இந்திய அரசும் முயற்சித்து வருகின்றன.

ஏற்கெனவே சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வசதி நடைமுறையில் இருக்கிறது.

இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான இந்த ஒப்பந்தத்தால் நிதிநுட்ப இணைப்பு அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ இந்திய விஜயத்தை மேற்கொண்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...