24 6662b2b1ef46e
இலங்கைசெய்திகள்

உறுதியற்ற நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு

Share

உறுதியற்ற நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு

வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள உயர்வு இம்மாதமும் உறுதியற்ற நிலையில் இருப்பதாக தோட்டத் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே21 ஆம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டுமென தொழில் அமைச்சின் செயலாளர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எனினும், இம்மாதத்திற்கான சம்பள இறுதி கணக்கு கடந்த 05ஆம் திகதி தோட்ட நிர்வாகங்களால் முடிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதமும் சம்பள உயர்வில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பள உயர்வை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்பு காட்டி வந்திருந்தது. இதற்கமைய, சம்பள அதிகரிப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 21 பெருந்தோட்ட நிறுவனங்களால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கானது, கடந்த 03ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது,மேன் முறையீட்டு நீதிமன்றம், வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென தீர்ப்பளித்தது.

எனவே, இம்மாதம் 10ஆம் திகதி வழங்கப்படவுள்ள சம்பளம் 1,700 ரூபாவின் அடிப்படையிலேயே இருக்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் சம்பள இறுதி கணக்கில் மாற்றம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என தொழிற்சங்க தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பள அதிகரிப்பு தொடர்பிலான சுற்றுநிருபங்கள் எவையும், தங்களுக்கு கிடைக்கவில்லையென தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 683d8e458a9b7
இலங்கைசெய்திகள்

நெருப்புடன் விளையாட வேண்டாம் :அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை

தாய்வான்(taiwan) பிரச்சனை சீனாவின்(china) உள்நாட்டு விவகாரமாகும். அதில் அமெரிக்கா(us) தலையிடுவது சரியல்ல. நெருப்புடன் அமெரிக்கா விளையாடக்...

25 683d85e661f0d
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை ஆட்சி அமைப்பு: மொட்டுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான ஆதரவு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பொன்றை...

images 18
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட முன்னாள் நகரசபைத் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02.06.2025) கைது செய்யப்பட்ட தலவாக்கலை (Talawakelle) – லிந்துலை...

25 683d9e89f25aa
இலங்கைசெய்திகள்

பைடன் கொலை செய்யப்பட்டார் – தற்போதிருப்பது யார்..! பகீர் கிளப்பிய ட்ரம்பின் பதிவு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது சமூக ஊடக தளமான ட்ரூத்...