இலங்கைசெய்திகள்

புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ள ஐ.தே.க: வெளியாகியுள்ள தகவல்

2 36
Share

புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ள ஐ.தே.க: வெளியாகியுள்ள தகவல்

பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) யானைச் சின்னத்துக்குப் பதிலாக பொதுச் சின்னமொன்றில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டார்.

அதே அடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் யானைச் சின்னத்துக்குப் பதில் வேறொரு சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் அன்னச் சின்னத்திலேயே இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்த வேட்பாளர்கள் அன்னச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...