2 36
இலங்கைசெய்திகள்

புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ள ஐ.தே.க: வெளியாகியுள்ள தகவல்

Share

புதிய சின்னத்தில் போட்டியிடவுள்ள ஐ.தே.க: வெளியாகியுள்ள தகவல்

பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) யானைச் சின்னத்துக்குப் பதிலாக பொதுச் சின்னமொன்றில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டார்.

அதே அடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் யானைச் சின்னத்துக்குப் பதில் வேறொரு சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் அன்னச் சின்னத்திலேயே இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்த வேட்பாளர்கள் அன்னச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....