இலங்கைசெய்திகள்

ரணிலின் தோல்வியை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளது : ஜே.வி.பி

Share
24 665691ab08400
Share

ரணிலின் தோல்வியை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளது : ஜே.வி.பி

ஜனாதிபதி தேர்தல மற்றும் பொதுத் தேர்தல்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிற்போடவேண்டும் என்ற ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் (Palitha Range Bandara) கோரிக்கையை ஏற்கமுடியாதது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தோல்வியை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்றுக்கொள்வதற்கு சமனாகும் என்று கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தீவிரமான அறிக்கை என்பதோடு மக்களின் இறையாண்மையை மீறுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்று நலிந்த கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளாக நீடிக்க ஒரு வாக்கெடுப்பை நடத்த இந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது.

இதன் மூலம் எந்தவொரு தேர்தலிலும் ரணிலின் தோல்வியை ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் அதிகார பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்சவை மக்கள் வெளியேற்றியுள்ளனர்.

எனவே, 134 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றுவது மக்களுக்கு ஒரு பெரிய காரியமல்ல என்பதை ஐக்கிய தேசியக்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...