24 665691ab08400
இலங்கைசெய்திகள்

ரணிலின் தோல்வியை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளது : ஜே.வி.பி

Share

ரணிலின் தோல்வியை ஐ.தே.க ஏற்றுக்கொண்டுள்ளது : ஜே.வி.பி

ஜனாதிபதி தேர்தல மற்றும் பொதுத் தேர்தல்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிற்போடவேண்டும் என்ற ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் (Palitha Range Bandara) கோரிக்கையை ஏற்கமுடியாதது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இது ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தோல்வியை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்றுக்கொள்வதற்கு சமனாகும் என்று கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தீவிரமான அறிக்கை என்பதோடு மக்களின் இறையாண்மையை மீறுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்று நலிந்த கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளாக நீடிக்க ஒரு வாக்கெடுப்பை நடத்த இந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது.

இதன் மூலம் எந்தவொரு தேர்தலிலும் ரணிலின் தோல்வியை ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் அதிகார பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்சவை மக்கள் வெளியேற்றியுள்ளனர்.

எனவே, 134 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றுவது மக்களுக்கு ஒரு பெரிய காரியமல்ல என்பதை ஐக்கிய தேசியக்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...