இலங்கைசெய்திகள்

ஐ.தே.கவை அழிக்க இடமளியோம்! ரவி கருணாநாயக்க எம்.பி. திட்டவட்டம்

12 30
Share

ஐ.தே.கவை அழிக்க இடமளியோம்! ரவி கருணாநாயக்க எம்.பி. திட்டவட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு சிலர் பணயக் கைதியாகப் பயன்படுத்த முற்படுகின்றனர். எனினும், கட்சியை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் நான்தான். எனவே, ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காகக் கட்சியை அழிக்க இடமளிக்க முடியாது.

மக்களின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்க வேண்டும். கட்சியை விட்டுச் சென்றவர்களும் மீள வரவேண்டும். ஒரு சிலருக்காக எமது கட்சியைப் பணயக் கைதியாகப் பயன்படுத்த இடமளிக்க முடியாது.

இந்த நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியாகும். அக்கட்சியை பழைய நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...