5 3
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலில் ஐ.தே.க எந்த சின்னத்தில் போட்டியிடும் : வெளியாகவுள்ள அறிவிப்பு

Share

பொதுத் தேர்தலில் ஐ.தே.க எந்த சின்னத்தில் போட்டியிடும் : வெளியாகவுள்ள அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் நாளை மறுதினத்துக்குள் அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கூட்டமொன்று நேற்று (01) கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தலைமையில் இடம்பெற்றதையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே ஆசு மாரசிங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இந்த சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) கலந்துரையாடல்களை நடத்துதல் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதில் பங்கேற்ற தரப்பினர் பல யோசனைகளை முன்வைத்தனர். ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருந்து எரிவாயு கொள்கலன் சின்னத்தைப் பெற முடியுமாயின், பொதுத் தேர்தலில் எரிவாயு சின்னத்தில் போட்டியிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எரிவாயு கொள்கலன் சின்னம் கிடைக்காவிட்டால் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னம் தொடர்பில் நான்காம் திகதிக்கு முன்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும். அதேநேரம் கட்சியின் பொதுச் செயலாளர் உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சைகளுக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலதா அத்துகோரள (Thalatha Atukorale) கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கின்றோம். அதற்கு முன்னர் தற்போதைய செயலாளர் பதவி விலக வேண்டும்“ என ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...