28 8
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழகத்தில் செலுத்திய ஊசி: மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Share

பல்கலைக்கழகத்தில் செலுத்திய ஊசி: மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

சப்ரகமுவ பல்கலைக்கழக(university of sabaragamuwa) விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட ஊசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இன்று (17) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

06 மாணவிகளும் ஒரு மாணவனும் என ஏழு மாணவர்களே பெலிஹுல் ஓயா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமனல ஏரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று (17) பிற்பகல் பல்கலைக்கழக மருத்துவமனையில் தடுப்பூசிகளை செலுத்தியதன் காரணமாகவே இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலிஹுல் ஓயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்வையிட வந்த சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுனில் சாந்தவிடம் இது தொடர்பாக ஊடகமொன்று கேட்டபோது,சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்திற்குள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...