28 8
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழகத்தில் செலுத்திய ஊசி: மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Share

பல்கலைக்கழகத்தில் செலுத்திய ஊசி: மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை

சப்ரகமுவ பல்கலைக்கழக(university of sabaragamuwa) விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட ஊசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இன்று (17) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

06 மாணவிகளும் ஒரு மாணவனும் என ஏழு மாணவர்களே பெலிஹுல் ஓயா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமனல ஏரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று (17) பிற்பகல் பல்கலைக்கழக மருத்துவமனையில் தடுப்பூசிகளை செலுத்தியதன் காரணமாகவே இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலிஹுல் ஓயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்வையிட வந்த சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுனில் சாந்தவிடம் இது தொடர்பாக ஊடகமொன்று கேட்டபோது,சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்திற்குள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
26 69755fc19b197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கழிப்பறைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் கழிப்பறைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து...

images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...