9 41
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் விநியோகம் : அதிரடியாக சிக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்

Share

போதைப்பொருள் விநியோகம் : அதிரடியாக சிக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்

கொழும்பு உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விநியோகிக்கும் வலையமைப்பில் ஈடுபட்ட 5 பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட பிரிவின் ஊழல் எதிர்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் நேற்று (24) போதைப்பொருள் முத்திரைகள், போதைப்பொருள், குஷ் போதைப்பொருட்கள் மற்றும் சிறிய எடையை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு சிறிய தராசுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் 5 பேர் கொண்ட கும்பல் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில் போதைப்பொருள் முத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையின் போது, ​​இந்த மோசடி கும்பல் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளுடன் எஞ்சிய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக நுகேகொட பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...