25 679a2f5386ca3
இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவி கழுத்தறுத்து கொலை! விசாரணையில் வெளிவந்த தகவல்

Share

இரத்தினபுரியில் தனது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை பின்னால் இருந்து வந்த நபர், கழுத்தறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றையதினம்(29.01.2025) அலபட பொலிஸ் எல்லைக்குட்பட்ட தெல்லபட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது, களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 29 வயதுடைய தெல்லபட பிரதேசத்தை சேர்ந்த யுவதியே உயிரிழந்துள்ளார்.

இதன்போது, கொலையாளி சம்பவ இடத்திலேயே விஷம் குடித்து விட்டு ஓடிய போதும் அருகிலிருந்த வயலில் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, கிராம மக்கள் அவரை இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 32 வயதுடைய குறித்த இளைஞன் மாணவியின் சக மாணவன் என்பதோடு அனுராதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

கொலை சம்பவம் இடம்பெற்ற போது, மாணவியின் தாயார் வீட்டில் வேறு வேலை செய்துகொண்டிருந்ததாகவும் தந்தை வெளியில் சென்றிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...