பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு சிக்கல்!
இலங்கைசெய்திகள்

பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு சிக்கல்!

Share

பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களுக்கு சிக்கல்!

பேராதனை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் வெளியேறியுள்ளமையினால் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் தினசரி கற்கை நெறிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 2022 முதல் இந்த ஆண்டு மே வரை 70 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தரும், ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித்திடம் நடத்திய விசாரணையில் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேராசிரியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது உண்மைதான். இது முக்கியமாக மருத்துவ பீடம், பொறியியல் பீடம், அறிவியல் பீடம் மற்றும் பல் மருத்துவ பீடம் ஆகியவற்றை பாதித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் வரையிலான 16 மாதங்களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னணி பேராசிரியர்கள் 70 பேர் பல்கலைக்கழகத்தை விட்டு முற்றாக வெளியேறி வெளிநாடு சென்றுள்ளனர். ஏராளமானோர் படிப்பு விடுப்பு எடுத்து வெளிநாடு சென்றுள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...