இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி: சமூக ஊடகங்களில் பொய்யான விபரங்கள்

image 760538e412
Share

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி: சமூக ஊடகங்களில் பொய்யான விபரங்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றியீட்டுவார்கள் என்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விபரங்கள் பொய்யானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இந்த விடயம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கைக் கிளையின் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த சமூக ஊடகப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவலின் பிரகாரம் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி வகிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மொட்டு கட்சி அடுத்த இடத்தையும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி மூன்றாம் இடத்தையும், நான்காம் இடத்தை அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் 339 வீதத்தினால் வளர்ச்சியடையும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இவ்வாறான ஓர் கருத்துக் கணிப்பை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கைக் கிளையினால் இவ்வாறான ஓர் அறிக்கை வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின் போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கைக் கிளையினால் கருத்து கணிப்பு நடத்தப்பட்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...