WhatsApp Image 2024 12 12 at 2.03.44 PM 1
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் பரவும் திடீர் காய்ச்சல் : கொழும்பிலிருந்து வெளியான அறிவிப்பு

Share

யாழ்ப்பாணத்தில் பரவும் திடீர் காய்ச்சல் : கொழும்பிலிருந்து வெளியான அறிவிப்பு

யாழ்.மாவட்டத்தில்(jaffna) தற்போது பரவி வரும் திடீர் காய்ச்சல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அல்லது எலிக்காய்ச்சலா(leptospirosis) என உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பதில் சமூக வைத்தியர் குமுது வீரகோன்(Dr. Kumudu Weerakoon) தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பரவும் காய்ச்சலுக்கு எலிக்காய்ச்சலுடன் தொடர்புள்ளதா என்பதை கண்டறிய காய்ச்சல் நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

“அடையாளம் தெரியாத காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இன்புளுவன்சா, எலிக்காய்ச்சல், டெங்கு போன்ற நோய்கள் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ” என்று வைத்தியர் குமுது வீரகோன் குறிப்பிட்டார்.

எனினும், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பருவகால நெல் விவசாயம் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் எலிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு வெள்ளத்தின் போது பல மரணங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் இந்த இறப்புகள் எலிக்காய்ச்சலால் ஏற்பட்டதா என்பதை தீர்மானிக்க அமைச்சகம் விசாரணைகளை நடத்தி வருகிறது.

இதுவரை, இந்த ஆண்டில் 10,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் பல்வேறு காரணங்களால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டில், 9,000 க்கும் அதிகமானோர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 200 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...