இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு வெளியான அறிவிப்பு

Share
2 1
Share

உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு வெளியான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சையின் மீள் கணக்கெடுப்பு முடிவுகள் மற்றும் இடைநிறுத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்ற பரீட்சார்த்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2023/2024 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உரிய விண்ணப்பங்களை இன்று (01) முதல் ஒக்டோபர் 08 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் அனுப்ப முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.ugc.ac.lk) 2023/2024 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விண்ணப்பங்களுக்கான அழைப்பு தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பான மேலதிக விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023/2024 கல்வியாண்டுக்கான விண்ணப்பதாரர்களுக்கு பாடநெறிகளுக்கான முன்னுரிமை வரிசையை மாற்றுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட இரண்டு வார கால அவகாசம் இந்த சந்தர்ப்பத்திற்கு பொருந்தாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...