24 66933d3a9416c
இலங்கைசெய்திகள்

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாதாள உலக தலைவர்களால் மீண்டும் போதைப்பொருள் கடத்தல்

Share

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாதாள உலக தலைவர்களால் மீண்டும் போதைப்பொருள் கடத்தல்

இலங்கையின் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான தலைவர்களாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ, குடு சலிந்து, வெலே சுதா மற்றும் பொடி லஸ்ஸி ஆகிய குற்றவாளிகள் சிறைச்சாலையில் இருந்து மீண்டும் போதைப்பொருள் கடத்தலை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த பாதாள உலகக் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து ஆறு நவீன கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதன் பின்னர் அவர்களின் பாதாள உலகச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவ மற்றும் குடு சாலிந்து ஆகிய இரு பாதாள உலகக் குற்றவாளிகள் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் பாதாள உலகச் செயற்பாடுகளிலோ போதைப்பொருள் கடத்தல்களிலோ ஈடுபடவில்லை என பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

எனினும் இந்த குற்றவாளிகள் தற்போது தமது கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி பாதாள உலகக் கும்பல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளை நடத்தி வருவதாக தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பில் இருக்கும் குடு சாலிந்து மற்றும் வெலே சுதா ஆகியோரிடம் 04 ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும், பூஸ்ஸ சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கணேமுல்ல சஞ்சீவ மற்றும் பொடி லேசி ஆகியோரிடம் மேலும் இரண்டு ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர்களின் கைகளுக்கு இந்த கையடக்கத் தொலைபேசிகள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...