14 12
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற தீர்ப்பினால் மகிழ்ச்சியில் பாதாள உலகக்குழுவினர்: அமைச்சர் தகவல்

Share

நீதிமன்ற தீர்ப்பினால் மகிழ்ச்சியில் பாதாள உலகக்குழுவினர்: அமைச்சர் தகவல்

பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பாதாள உலகக்குழுவினர் அதிக மகிழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பு வழங்குவது பாதாள உலகக்குழுவினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும், அமைச்சரவையும் நீதிமன்றை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயற்படுவதாக ஓர் நிலைப்பாட்டை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

21 ஆம் திருத்தச் சட்ட மூலம் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் நீதித்துறையை சுயாதீனப்படுத்த நடவடிக்கை எடுத்தார் எனவும் அமைச்சர் பிரசன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, உள்ளுராட்சி மன்ற நியமனங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பதவி ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் நீதிமன்றம் மூன்று தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

எனினும் எதிர்க்கட்சிகள் பொலிஸ் மா அதிபர் பதவி குறித்து மட்டுமே பேசுவதாகவும்,பொலிஸ் மா அதிபர் குறித்த உத்தரவிற்கு பாதாள உலகக் குழுவினரே அதிகம் மகிழ்ச்சியடைந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுவினர் எதிர்க்கட்சிக்கு பாதுகாப்பு வழங்குவதனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...