8 6
இலங்கைசெய்திகள்

கொலைக்களமாக மாறப்போகும் இலங்கை – பலரை கொலை செய்ய திட்டம்

Share

கொலைக்களமாக மாறப்போகும் இலங்கை – பலரை கொலை செய்ய திட்டம்

பிரான்ஸில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் டுபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெட்டி ஆகியோரின் கொலை திட்டம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாடகர், நடிகர் உட்பட 07 பேரை கொலை செய்வதற்கு காஞ்சிபனியும் லொகு பெட்டியும் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.

இந்த 7 பேர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், அதனைத் திருப்பிக் கொடுக்காமையினால் கொலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இந்த பாடகர் மற்றும் அவரது குழுவினர் பாதாள உலக உறுப்பினர்கள் பதுங்கியிருக்கும் நாடுகளுக்கு சென்று வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் படுகொலை திட்டத்தின் உண்மை தன்மை தொடர்பில் விசாரிப்பதற்கு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

 

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...