8 6
இலங்கைசெய்திகள்

கொலைக்களமாக மாறப்போகும் இலங்கை – பலரை கொலை செய்ய திட்டம்

Share

கொலைக்களமாக மாறப்போகும் இலங்கை – பலரை கொலை செய்ய திட்டம்

பிரான்ஸில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் டுபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெட்டி ஆகியோரின் கொலை திட்டம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாடகர், நடிகர் உட்பட 07 பேரை கொலை செய்வதற்கு காஞ்சிபனியும் லொகு பெட்டியும் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது.

இந்த 7 பேர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், அதனைத் திருப்பிக் கொடுக்காமையினால் கொலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இந்த பாடகர் மற்றும் அவரது குழுவினர் பாதாள உலக உறுப்பினர்கள் பதுங்கியிருக்கும் நாடுகளுக்கு சென்று வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் படுகொலை திட்டத்தின் உண்மை தன்மை தொடர்பில் விசாரிப்பதற்கு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

 

Share
தொடர்புடையது
marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

241009 Diego Garcia Tamils
அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக...

Screenshot 2025 12 18 075235
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...