18 27
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குழு செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு

Share

பாதாள உலக நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜயதிஸ்ஸ, இந்தப் பிரச்சினையை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு பாதுகாப்புப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசாங்கமாக, பாதாள உலகத்தை அடக்குவதற்கும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறுகிய கால அல்லது இரண்டு வார நடவடிக்கைகளை மட்டுமே அரசாங்கம் நம்பியிருக்க விரும்பவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் இந்த விடயத்தில் முறையாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ, அதன் விளைவுகளை எதிர்காலத்தில் காணமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...