18 27
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குழு செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு

Share

பாதாள உலக நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜயதிஸ்ஸ, இந்தப் பிரச்சினையை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு பாதுகாப்புப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசாங்கமாக, பாதாள உலகத்தை அடக்குவதற்கும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறுகிய கால அல்லது இரண்டு வார நடவடிக்கைகளை மட்டுமே அரசாங்கம் நம்பியிருக்க விரும்பவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் இந்த விடயத்தில் முறையாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ, அதன் விளைவுகளை எதிர்காலத்தில் காணமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...