tamilni 370 scaled
இலங்கைசெய்திகள்

ஆறு மாதங்களில் பாதாள உலக குழு முடிவுக்கு கொண்டு வரப்படும்

Share

ஆறு மாதங்களில் பாதாள உலக குழு முடிவுக்கு கொண்டு வரப்படும்

எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் பாதாள உலகக் குழு செயற்பாடுகளும் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த நாட்டையும் ஆக்கிரமித்துள்ள போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வதற்கான பின்னணி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி யுக்திய என்னும் பெயரில் விசேட பொலிஸ் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் தொடரும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக இணைந்து முன்னெடுத்த யுக்திய நடவடிக்கையின் ஊடாக இதுவரையில் 6583 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...