1732616154 2
இலங்கைசெய்திகள்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைதாக மாட்டார்கள் : நலிந்த ஜயதிஸ்ஸ

Share

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைதாக மாட்டார்கள் : நலிந்த ஜயதிஸ்ஸ

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் ஊடாக எவரையும் கைது செய்யவோ, வழக்குத் தொடரவோ அல்லது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவோ அரசாங்கம் யாருக்கும் அறிவுறுத்தல் வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவருக்கும் ஏதேனும் காரணத்திற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நாடாளுமன்றில் சட்டமொன்று இயற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் நாட்டின் நன்மதிப்பினை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் ஊடகமொன்று இந்த திட்டம் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் பலாக்காய் அல்லது இலைகஞ்சி விற்பனை செய்ய முடியாது என ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...