4
இலங்கைசெய்திகள்

இலங்கை வரும் ஐநாவின் உயர் அதிகாரி.. தொடர் அழுத்தத்தில் அநுர அரசாங்கம்

Share

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதம் அல்லது ஜூலை ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சக தரப்புக்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த விஜயத்திற்கான உறுதியான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இதன்படி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.

கடைசியாக, 2016 பெப்ரவரியில், மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது ஜெய்த் ராத் அல் ஹசைன் ஆணையாளராக இலங்கைக்கு வருகைத் தந்தார்.

இந்தநிலையில், 2022 ஒக்டோபரில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்ட ஒஸ்திரிய நாட்டவரான துர்க்கின் இலங்கை பயணம் முக்கியத்தும் மிக்கமாக அமைந்துள்ளது.

சர்வதேச சமூகத்தால் எழுப்பப்பட்ட மனித உரிமைகள் கவலைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்று இலங்கை அரசாங்கம் தடுமாறும் நிலையில் அவரின் பயணம் அமைகிறது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...