சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

18 3

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை நீடித்துள்ளது.

குறித்த திட்டத்தை ஒக்டோபர் 6 2025 அன்று நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையின் உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய போர் குற்றங்கள் தொடர்பான அறிக்கையிடல் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஒருமித்த கருத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறித்த தீர்மானம், அதிகார துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், பொறுப்புக்கூறலைத் தடுக்க அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சித்த போதிலும், அவர்கள் ஒரு நாள் நீதியைக் காண்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காணப்படுவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு மற்றும் அரசாங்கத்திற்கு இடையேயான உள்நாட்டுப் போர் 1983 மற்றும் 2009 க்கு இடையில் நடைபெற்றது.

இரு தரப்பினரும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், கட்டாயமாக காணாமல் போதல்கள் உள்ளிட்ட எண்ணற்ற அட்டூழியங்களைச் செய்ததாக அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றிபெறுவதற்கு முன்னரான இறுதி மாதங்களில், விடுதலைப்புலிகள் அமைப்பு மக்களை மனிதக் பாதுகாப்புக்காக பயன்படுத்தியபோதும், இலங்கை இராணுவம் “பாதுகாப்பான மண்டலங்கள்” என்று அறிவித்த பகுதிகள் மீது குண்டுவீசித் தாக்கியபோதும் சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தடுக்கும் அதே வேளையில் இந்தக் குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளன.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அச்சுறுத்தவும் கண்காணிக்கவும் அரசு பாதுகாப்பு நிறுவனங்களைப் பயன்படுத்தியுள்ளன என அறிக்கையில் சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது.

மோதல் தொடர்பான குற்றங்களைத் தொடர ஒரு கலப்பின நீதி பொறிமுறையை நிறுவுவதற்கான உறுதிமொழிகளில் இருந்து அரசாங்கம் பின்வாங்கியதைத் தொடர்ந்து, மனித உரிமைகள் ஆணையகம் 2021 இல் ஐ.நா. இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவியது.

இதன்படி 2024 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய அரசாங்கம், முந்தைய சில நிர்வாகங்களை விட சிலவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் ஐ.நா. திட்டத்தை தொடர்ந்து நிராகரித்து வருகிறது என்றும் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

போருக்குப் பிந்தைய “நல்லிணக்கத்தை” முன்னெடுப்பதற்கும் சில அடையாள வழக்குகளைத் தொடருவதற்கும் இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும், சிறிய முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இது பாதிக்கப்பட்டவர்களுக்கு முந்தைய மீறப்பட்ட வாக்குறுதிகளை நினைவூட்டுகிறது.

உறுதியான நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மூலமும் நம்பகத்தன்மையை நிரூபிப்பதன் மூலமும் உள்நாட்டு உண்மையைச் சொல்லுதல் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான வாக்குறுதிகளை அநுர நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

இலங்கையில் குறைந்தது 20 மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் எதுவும் இன்னும் வெற்றிகரமாக விசாரிக்கப்படவில்லை என்பதையும் அறிக்கை விவரித்துள்ளது.

மேலும், யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள செம்மணி மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் இதில் டிஎன்ஏ சோதனைக்கான உபகரணங்களை வழங்குவதும் உறுதிசெய்யப்படவேண்டும் எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் மிரட்டலை முடிவுக்குக் கொண்டுவர காவல்துறை, பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அடக்குமுறைச் சட்டங்களை ரத்து செய்தல், சுயாதீனமான வழக்கறிஞரை நிறுவுதல் மற்றும் அடையாள வழக்குகளை விசாரித்தல் என்ற தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் நீதி மறுக்கப்பட்டாலும், உலகளாவிய அதிகார வரம்பு என்ற கோட்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் சாத்தியமான வழக்குகளை ஆதரிப்பதற்கு ஐ.நா.வின் சாட்சிய சேகரிப்பு திட்டம் அவசியமாக உள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க உரிமை உண்டு என்பதையும் அறிக்கை அடிகோடிட்டுள்ளது.

Exit mobile version