rtjy 125 scaled
இலங்கைசெய்திகள்

யுக்திய சுற்றிவளைப்பில் இலட்சக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்

Share

யுக்திய சுற்றிவளைப்பில் இலட்சக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்]

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கையின் ஊடாக 2938 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பொலிஸார் யுக்திய என்னும் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம் வரையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களின் ஊடாக 2938.73 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் 1427 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1370 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள், கட்டடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைப்பற்றப்பட்டுள்ள தங்கத்தின் மொத்த பெறுமதி 140.5 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 19 ஆம் திகதி முதல் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அடையாளம் காணப்பட்டுள்ள பிரதான போதைப்பொருள் வர்த்தகர்கள் 109 பேரின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...