24 66224b287651d
இலங்கைசெய்திகள்

பிரித்தானிய வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Share

பிரித்தானிய வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியா வர வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் போலி ILTS சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பொன்றில், இலங்கை மக்கள் பலரும் பிரித்தானியாவிற்கு வர வீசா விண்ணப்பம் செய்கிறார்கள். இந்த நிலையில் தெரியாமல் மக்கள் நிறைய பேர் போலி ILTS சான்றிதழை பெறுகிறார்கள். சிலர் தெரிந்தும் வாங்குகிறார்கள்.

இந்த சான்றிதழ் தொடர்பில் பலரும் தவறாக வழிநடத்துகிறார்கள். முதலில் இதனை அதிமுக்கிய எச்சரிக்கையாக கொண்டு எந்த ILTS குறிப்பாக இலங்கையிலிருந்து ILTS சமர்ப்பிப்பதாக இருந்தால் அதனை உள்ளக ரீதியாக அவதானிக்கிறார்கள்.

எனவே நீங்கள் பரீட்சை நிலையத்தில் அமர்ந்து பரீட்சை எழுதி அதற்கான புள்ளிகளை எடுக்கவில்லை என்றால், யாராவது உங்களுக்கு ILTS சென்டரில் தானே முகாமையாளர், தான் அங்கு பெரிய பதவியில் இருக்கிறேன் என கூறினால் தயவு செய்து நம்ப வேண்டாம்.

ஏனெனில் அதனை சரிபார்க்கும் போது அது போலியென உறுதியாகினால் 10 வருடங்கள் தடை விதிக்கப்படும். அதன் பிறகு பிரித்தானியா வர முயற்சித்தால் அது மிகவும் கடினமானதாக இருக்கும். தயவு செய்து இது தொடர்பில் இலங்கை மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...