இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா

24 66111ae9f079e
Share

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா

இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக பிரித்தானியா (United Kingdom) இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) புதுப்பித்துள்ளது.

குறித்த பயண ஆலோசனையானது, லண்டனில் (London) உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் பிரித்தானிய அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய எதிர்வரும் ஏப்ரல் 05 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

ஜனவரி 01 மற்றும் மார்ச் 27இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிரித்தானியாலிருந்து சுமார் 53,928 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய, புதுப்பிக்கப்பட்டுள்ள பயண ஆலோசனையில், அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், பாதுகாப்புத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் போன்றவை குறித்த முந்தைய தகவல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

பொருளாதார ரீதியில் இலங்கை தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தெளிவான புரிதலை ஏற்படுத்துவதற்காக, முன்னைய சுற்றுலா ஆலோசனையின் மூலம் வழங்கப்பட்ட தகவல்களை நீக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பிரித்தானியா மூன்றாவது பெரிய நாடாக உள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட சுற்றுலா ஆலோசனையானது இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய பங்காற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...