பிரித்தானியா
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா

Share

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா

இலங்கைக்கான தமது பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பித்துள்ளது.

இதன்படி பயணம் செய்வதற்கு முன், இலங்கையின் தற்போதைய நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் நுழைவுத் தேவையுள்ள பகுதியைச் சரிபார்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் தமது மக்களிடம் கோரியுள்ளது.

பயணக் காப்பீட்டைப் பெறுவதும் அது போதுமான காப்பீட்டை வழங்குகிறதா என்பதைச் சரிபார்ப்பதும் முன்னெப்போதையும் விட முக்கியமானது.

இலங்கையின் பொருளாதார நிலை பலவீனமாகவே உள்ளது. நிலைமைகள் மோசமடைந்தால் சில தயாரிப்புகள் உதாரணமாக மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்கள் குறைவாகக் கிடைக்கக்கூடும்.

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கிடைப்பது, போக்குவரத்து, வணிகம் மற்றும் வணிகச் சேவைகளைப் பாதிக்கலாம். சனநெரிசல் மிகுந்த இடங்களை தவிர்க்குமாறும், இந்த பயண ஆலோசனை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் மூலம் முன்னேற்றங்களை அவதானிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டவர்கள் பார்வையிடும் இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெகுவாக கூடும் இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல்கள் நடத்தப்படலாம். நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

இந்தநிலையில் உதவி தேவைப்படுமானால் நாட்டின் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான தமது பயண ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...