4 34
இலங்கைசெய்திகள்

தாக்குதல் எச்சரிக்கையுடன் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ள பிரித்தானியா

Share

தாக்குதல் எச்சரிக்கையுடன் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ள பிரித்தானியா

இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் தமது நாட்டவருக்கு, பிரித்தானியா வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம், எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனை ஒன்றில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் இரவு விடுதிகள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள், முக்கிய நிகழ்வுகள், மத நிகழ்வுகள் உட்பட வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என்று அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே பிரித்தானிய குடிமக்கள் நெரிசலான பொது இடங்களைத் தவிர்க்கவும், தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எப்போதும் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் ஊடக அறிக்கைகளைப் புதுப்பித்த நிலையில் தெரிந்துக்கொள்ளவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் ஏற்படும் மோதல்கள் உலகம் முழுவதும் பதற்றங்களை அதிகரித்துள்ளன.

அல்-கொய்தா மற்றும் டேஷ் போன்ற பயங்கரவாத குழுக்கள், இந்த மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தங்கள் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஆகவே, இந்த மோதல், தனி நபர்களும் தாக்குதல்களை நடத்தத் தூண்டக்கூடும் என்று பயண ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்கள் யூத அல்லது முஸ்லிம் சமூகங்களை அல்லது இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களை குறிவைக்கலாம் என்று பயண ஆலோசனை கூறுகிறது.

தாக்குதல்கள் கண்மூடித்தனமாக,எச்சரிக்கை இல்லாமல் நிகழலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 2019,ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது, இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் 3 விருந்தகங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 8 பிரித்தானிய பிரஜைகள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...