17 21
இலங்கைசெய்திகள்

மனித இறப்புக்கு உதவி செய்ய இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் வழங்கிய வரலாற்று ஒப்புதல்

Share

மனித இறப்புக்கு உதவி செய்ய இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் வழங்கிய வரலாற்று ஒப்புதல்

நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், தீராத நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு குறைவான ஆயுட்காலத்தை கொண்ட முதியவர்கள், தங்கள் வாழ்நாளை முடித்துக்கொள்ள ஆதரவளிக்கும் வதையறா இறப்பு யோசனைக்கு ஆதரவாக இங்கிலாந்தின் (England) நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இதன்மூலம் குறித்த இறப்புக்களை சட்டப்பூர்வமாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ளனர்.

சுமார் ஐந்து மணிநேர தீவிரமான விவாதத்திற்குப் பின்னர், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் மல்க, Terminally Ill Adults (வாழ்க்கை முடிவு) யோசனையின் இரண்டாம் வாசிப்பின்போது வாக்களித்தனர்.

இதன்போது 330 ஆதரவாகவும், 275 எதிராகவும் வாக்களித்த நிலையில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த யோசனையின் விதிமுறைகளின்படி, ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான ஆயுட்காலத்தை மாத்திரமே கொண்ட ஒரு பெரியவர், இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர் தமது முடிவை அங்கீகரித்தால், தமது வாழ்நாளை முடித்துக்கொள்ள உதவி பெறலாம்.

இந்தநிலையில் குறித்த யோசனையை, சட்டமாக மாற்றுவதற்கு இன்னும் சில தடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொது மற்றும் பிரபுக்கள் சபையில் ((The Commons and the House of Lords) ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் வாசிப்பின்போது நிபந்தனையுடனான ஆதரவை மட்டுமே வழங்கியுள்ளனர்.

யோசனையின் மூன்றாம் வாசிப்பில் குறிப்பிடத்தக்க திருத்தம் இல்லாவிட்டால், தாம் யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என்று அவர்கள் நிபந்தனையை விதித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...