17 21
இலங்கைசெய்திகள்

மனித இறப்புக்கு உதவி செய்ய இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் வழங்கிய வரலாற்று ஒப்புதல்

Share

மனித இறப்புக்கு உதவி செய்ய இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் வழங்கிய வரலாற்று ஒப்புதல்

நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், தீராத நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு குறைவான ஆயுட்காலத்தை கொண்ட முதியவர்கள், தங்கள் வாழ்நாளை முடித்துக்கொள்ள ஆதரவளிக்கும் வதையறா இறப்பு யோசனைக்கு ஆதரவாக இங்கிலாந்தின் (England) நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இதன்மூலம் குறித்த இறப்புக்களை சட்டப்பூர்வமாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ளனர்.

சுமார் ஐந்து மணிநேர தீவிரமான விவாதத்திற்குப் பின்னர், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் மல்க, Terminally Ill Adults (வாழ்க்கை முடிவு) யோசனையின் இரண்டாம் வாசிப்பின்போது வாக்களித்தனர்.

இதன்போது 330 ஆதரவாகவும், 275 எதிராகவும் வாக்களித்த நிலையில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த யோசனையின் விதிமுறைகளின்படி, ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான ஆயுட்காலத்தை மாத்திரமே கொண்ட ஒரு பெரியவர், இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர் தமது முடிவை அங்கீகரித்தால், தமது வாழ்நாளை முடித்துக்கொள்ள உதவி பெறலாம்.

இந்தநிலையில் குறித்த யோசனையை, சட்டமாக மாற்றுவதற்கு இன்னும் சில தடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொது மற்றும் பிரபுக்கள் சபையில் ((The Commons and the House of Lords) ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் வாசிப்பின்போது நிபந்தனையுடனான ஆதரவை மட்டுமே வழங்கியுள்ளனர்.

யோசனையின் மூன்றாம் வாசிப்பில் குறிப்பிடத்தக்க திருத்தம் இல்லாவிட்டால், தாம் யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என்று அவர்கள் நிபந்தனையை விதித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...