இலங்கைசெய்திகள்

மனித இறப்புக்கு உதவி செய்ய இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் வழங்கிய வரலாற்று ஒப்புதல்

Share
17 21
Share

மனித இறப்புக்கு உதவி செய்ய இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் வழங்கிய வரலாற்று ஒப்புதல்

நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், தீராத நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு குறைவான ஆயுட்காலத்தை கொண்ட முதியவர்கள், தங்கள் வாழ்நாளை முடித்துக்கொள்ள ஆதரவளிக்கும் வதையறா இறப்பு யோசனைக்கு ஆதரவாக இங்கிலாந்தின் (England) நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இதன்மூலம் குறித்த இறப்புக்களை சட்டப்பூர்வமாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ளனர்.

சுமார் ஐந்து மணிநேர தீவிரமான விவாதத்திற்குப் பின்னர், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் மல்க, Terminally Ill Adults (வாழ்க்கை முடிவு) யோசனையின் இரண்டாம் வாசிப்பின்போது வாக்களித்தனர்.

இதன்போது 330 ஆதரவாகவும், 275 எதிராகவும் வாக்களித்த நிலையில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த யோசனையின் விதிமுறைகளின்படி, ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான ஆயுட்காலத்தை மாத்திரமே கொண்ட ஒரு பெரியவர், இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர் தமது முடிவை அங்கீகரித்தால், தமது வாழ்நாளை முடித்துக்கொள்ள உதவி பெறலாம்.

இந்தநிலையில் குறித்த யோசனையை, சட்டமாக மாற்றுவதற்கு இன்னும் சில தடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொது மற்றும் பிரபுக்கள் சபையில் ((The Commons and the House of Lords) ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் வாசிப்பின்போது நிபந்தனையுடனான ஆதரவை மட்டுமே வழங்கியுள்ளனர்.

யோசனையின் மூன்றாம் வாசிப்பில் குறிப்பிடத்தக்க திருத்தம் இல்லாவிட்டால், தாம் யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என்று அவர்கள் நிபந்தனையை விதித்துள்ளனர்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...