இலங்கையின் நிவாரண நிதி: பிரித்தானியா மனிதாபிமான உதவியை 1 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது!

vcvc 1

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை 1 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் (GBP 1 Million) வரை அதிகரித்துள்ளது.

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இதற்கு முன்னர் 675,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் மனிதாபிமான உதவியை வழங்குவதாக அறிவித்திருந்தது.

நாட்டின் மோசமான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த உதவித் தொகை ஒரு மில்லியன் பவுண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவால் வழங்கப்பட்ட அவசர அனர்த்த நிவாரணங்கள், அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிதியுதவி அதிகரிப்பு, இலங்கையின் மீட்சி மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version