tamilni 439 scaled
இலங்கைசெய்திகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது மிக ஆபத்தானது!

Share

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது மிக ஆபத்தானது!

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது மிகவும் ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதனால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் வடக்கு பொலிஸ் பிரிவிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் பிரிவினைவாத யுத்தம் ஏற்படும் சாத்தியம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகள், நேரடியாக வட மாகாண பொலிஸாருக்கு உதவிகள் வழங்கக் கூடும்.

13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் மிகவும் ஆபத்தானது பொலிஸ் அதிகாரம்.

பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்யும் நோக்கில் தாம் 22ம் திருத்தச் சட்டம் என்ற திருத்தமொன்றை கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் அல்ல என உதய கம்மன்பில சிங்கள தொலைக்கட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...