rtjy 120 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் இரண்டு பெண்கள் கொடூரமாக கொலை

Share

தென்னிலங்கையில் இரண்டு பெண்கள் கொடூரமாக கொலை

மாத்தறை – பிரவுன்ஸ்ஹில் டெரன்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்களாக பணிபுரியும் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாலட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணும் மாத்தறை அபேகுணவர்தன மாவத்தையில் வசிக்கும் 70 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் நேற்று (07.10.2023) காலை மாத்தறையில் உள்ள தனது வியாபார இடத்திற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை கண்டுள்ளார்.

வீட்டின் வெளியே அமைந்துள்ள குளியலறை மற்றும் கழிவறையில் சடலங்கள் காணப்பட்டதாகவும், பின்னர் இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு பெண்களையும் கொலை செய்த பின்னர், அந்தந்த வீட்டில் இருந்த பாதுகாப்பு கமரா அமைப்பின் தரவுகளை சந்தேக நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

எனினும் பக்கத்து வீடொன்றின் பாதுகாப்பு கமராக்களை சோதனையிட்ட போது குறித்த நபர் குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...