24 661366ae60789
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் சுங்க வரி செலுத்தாமல் கொண்டுவரப்பட்ட 12 மடிக்கணினிகள் மற்றும் 55 மதுபான போத்தல்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்பிரிவு அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கைக்கு வந்த இரண்டு விமானப் பயணிகளின் பயணப்பொதிகள் சோதனையின் போது, பாதுகாப்பான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை வர்த்தகர்கள் இருவர் குறித்த பொருட்களை கொண்டு வந்துள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...